Channel Avatar

News 11 tamil_நியூஸ் 11 தமிழ் @UCFN_sbNFHbHH1HcJIIC95kQ@youtube.com

152K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 4 weeks ago

வாக்கெடுப்பில் விஜய் முதலிடம் | விஜய் வந்தா நல்லாருக்கும் 80% | DMK வரணும் 20% ADMK 0% சீமான் 2%
https://youtu.be/euy3X3uWiGk

73 - 10

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 1 month ago

மகிழ்ச்சி பொங்கட்டும்

29 - 0

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 1 month ago

#துபாய் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில்....
20 அணிகள் பங்குபெற்ற முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்...
இந்திய வீரர்... #அஜித்குமார் 7-வது இடம் பிடித்து...
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து முதலிடம் நோக்கி முன்னேறி... இந்தியாவுக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுத்தர அட்வான்ஸ் வாழ்த்துகள் சகோ. #Ajithkumar 😊👍👌💐

#AKRacing | #AjithKumarRacing | #Dubai | |#24HSERIES

266 - 2

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 1 month ago

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு சுகர் வந்த பிறகு #கண்ணகி_பாட்டி என்னென்ன பேசுது பாருங்க 😀

கண்ணகி வம்சாவழியினர் யாரும் இருந்தா கண்ணகி பேருக்கு இழுக்கு ஏற்படுத்துறாங்கனு வழக்கு போடுங்கயா இல்லேனா 20 வருசம் கழிச்சு #நயன்தாராவும் இப்படி தான் பேசும்ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு சுகர் வந்த பிறகு #கண்ணகி_பாட்டி என்னென்ன பேசுது பாருங்க 😀

கண்ணகி வம்சாவழியினர் யாரும் இருந்தா கண்ணகி பேருக்கு இழுக்கு ஏற்படுத்துறாங்கனு வழக்கு போடுங்கயா இல்லேனா 20 வருசம் கழிச்சு #நயன்தாராவும் இப்படி தான் பேசும்

37 - 4

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 1 month ago

கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தின் குலசேகர படி மீது தெரியாமல் ஏறி நிற்கிறார் இசைஞானி. வைணவக் கோவில்களில் அர்த்த மண்டபத்தின் படியாக குலசேகர ஆழ்வாரே இருப்பதால் அப்படி குலசேகரப் படி என்றே அழைக்கப்படுகிறது. அந்த குலசேகர படி மீது ஏறி நிற்க வேண்டாம் என்று ஜீயர் ஸ்வாமிகள் இசைஞானியிடம் அறிவுறுத்த இசைஞானியும் அறியாமல் செய்த தவறை உணர்ந்து பின் வாங்குகிறார்...

இசைஞானி கருவறைக்குள் நுழையவும் இல்லை! அதே சமயம் கோவில் அர்ச்சகர்கள் இசைஞானிக்கு பரிவட்டம் கட்டி ஆண்டாள் தாயார் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னாரின் மாலையும் ப்ரஸாதமாக கொடுத்து உரிய மரியாதை அளிக்க தான் செய்தார்கள்! கோல்மால்புரம் போடும் எச்ச பிஸ்கட்டுக்கு வாலாட்டும் திராவிட எச்சை மீடியாக்கள் இதை எப்படி மடைமாற்றுகிறான்கள் தற்குறிகள்...

29 - 0

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 2 months ago

1940-1980 பிறந்தவர்கள் அனுபவித்த மறக்கமுடியாத அனுபவங்கள்:

#அது_ஒரு_கனாக்காலம்

6 மணி சங்கு .. 10 மணி சங்கு ... 1 மணி சங்கு ... 5 மணி சங்கு .. 8 மணி சங்கு... சங்கு ஊதலை கேட்டு நேரம் தெரிந்துகொண்ட காலம்..!

மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்து நேரம்.. காலம்.. தெரிந்து கொண்ட காலம் ...!

கைக்கடிகாரம் அரிதாக இருந்த காலம்...

கைக்கடிகாரம் கட்டியவர்களை வசதி படைத்தவர்களாக பார்த்த காலம்...!

கைக்கடிகாரத்தை தினமும் கீ கொடுத்து .. வைண்டிங் செய்து.. நேரம் பார்த்து ..அதனை பொக்கிஷமாக வைத்திருந்த காலம்.!

நாட்டு ஓடு வீடுகள் அதன் நடுவில் முற்றம் .. மழை பெய்தால் குற்றால அருவி போல் கொட்டும் காலம்

பெரிய கூட்டுக் குடும்பங்கள்
ஓயாத பிள்ளைகள் சத்தம்
சாணி தரையில் தவழ்ந்து நகர்ந்த சிறு குழந்தைகள் ...!

பிள்ளைகள் நிறைந்த சலசலப்பான வீடுகள் ...! பிள்ளைகளெல்லாம் வீட்டின் நடு கூடத்தில் ... ஒன்றாக விளையாடி.. கதை பேசி.. பாய் விரித்து.. ஏழரை மணிக்கெல்லாம் தூங்கி ..காலை ஆறு மணிக்கு முன் எழுந்த காலம்...!

வீட்டுக்கு ஒரு மாடு ... மாட்டு கொட்டகை ... கோனார் கறந்த பாலில் தயிர் உரைக்கு ஊற்றி காலையில் மத்தை வைத்து மோர் கடைந்து ... திரண்ட வெண்ணையில் நெய் உருக்கிய காலம் ..!

வீட்டு முன் .. பெண்கள் சாணி தெளித்து.. அதிகாலையில் கோலம் போட்ட நாட்கள் ..!

சாணி பூசிய அடுப்பாங்கரை .. கரி படிந்த சமையக்கட்டு ... சாணி மொழுகி.. கோலம் போட்ட அடுப்பை .... தரையில் உட்கார்ந்து .. ஊதாங்குழாயில் ஊதி ... புகையுடன் போராடி .. விறகை பற்றவைத்து .. சமையல் செய்த காலம்...!

பெரியவர்களை .. . பட்டப்பெயர்... சொல்லி மரியாதையாக கூப்பிட்ட காலம் ..!

பிள்ளைக் குட்டிகள் பிறக்கும் போது .. வீட்டிலேயே பிரசவம் ... மிட் வைப் (midwife) என்று சொல்லக்கூடிய நர்சு அம்மாக்கள்.. செலவில்லாமல் பிரசவம் பார்த்த காலம் ..!

ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்
வீட்டில்.. பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரியில்லை என்றால்.. ஐயங்கடை தெரு பிள்ளை வைத்தியர் வீட்டுக்கு சென்ற காலம் ..!

எல்லாம் பாட்டி வைத்தியம் தான் .. காது வலி என்றால் மிளகாய் கூட்டில் காய்ந்த நல்லஎண்ணையை காதில் ஊற்றிய காலம் ...

வயிற்று போக்குக்கு கடுக்காயை ..நீர் கோர்த்து ..கல்லில் தேய்த்து ..வழித்து ..தண்ணீர் கலந்து சங்கில் கொடுத்த காலம் .

புண், கீறல், காயம், பூச்சிக்கடிக்கு ...கைவசம் தெரிந்த ஒரே மருந்து .. "சைபால்" டப்பா மருந்து தான்..!
குப்புசாமி, கோவிந்தசாமி, அந்தோணிசாமி என்ற எல்லா சாமிகளின் பெயரை வைத்து கூப்பிட்ட காலம்..!

வீட்டிலேயே வடகம் ...முறுக்கு அச்சில் விரித்த துணியில் பிழிந்து ... அதனுடன் தாளிக்கிற வடகம் உருட்டி வெயிலில் காய போட்ட காலம்...!

வீட்டில் பச்சரிசி வாங்கி ஊறப்போட்டு காயவைத்து உலக்கையில் இடித்து முறுக்கு சுட்ட காலம்...!

பூச்சந்தையில்.. கோடையில்.. பெரிய குடைமிளகாய்.. சின்ன குடைமிளகாய் வாங்கி.. ஈக்கு குச்சியில் குத்தி .. உப்பு ..புளிச்சத்தயிரில் .. புரட்டி .. ..ஊறப்போட்டு .. காயவைத்த காலம் ..!

பெண்கள் நேரம் கிடைக்கும் கிடைக்கும்போதெல்லாம் கம்பிளி நூலினை வாங்கி ஸ்வெட்டர் நிட்டிங்
செய்த காலம்...!

பூச்சந்தையில் சேர் கணக்கில் மல்லிகை பூ மற்றும் கனகாம்பரம் வாங்கி.. வீட்டிலேயே.. பூ பிண்ணிய காலம்..!

டெலிகிராம் தந்தி வந்தால் வீடே கூடி என்ன செய்தி வந்துள்ளது என்று ஆர்வத்துடன் கேட்ட சமயம்...!

பொழுதுபோக்கு ... தாயம் .. பல்லாங்குழி...!

சட்டினி .. துவையல் .. குழம்பு மிளகாய் கொத்தமல்லி
அரைப்பதற்கு அம்மி குழவி..!
தோசை இட்லி மாவுக்கு ஆட்டுக்கல்...

தோசை ஊற்றுவதற்கு கல்லில் செதுக்கிய தோசைக்கல்..!

குறவர்கள் கூவி விற்ற கொக்கு, மணிப்புறா, கௌதாரி, உள்ளான் மற்றும் காட்டு முயல்கள்..!

விறகு வண்டிகளில் .. முந்திரி விறகு .. சவுக்கு மிலாறு .. துவரை மிலாறு வாங்கின காலம் ...!

பெரிய திண்ணை வீடுகள்.. நடந்து செல்பவர்கள் தைரியமாக வீடுகளில் செம்பு தண்ணி வாங்கி குடித்து .. திண்ணையில் ஓய்வெடுத்து சென்ற காலம்...!

பள்ளிகளுக்கு ஒரு சின்ன மஞ்ச பையில் .. சிலேட்டு, சிலேட்டு குச்சி இரண்டு மூன்று புத்தகங்கள் ..ஸ்கூல் பாக் பற்றி தெரியாத காலம்

பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி .. பெஞ்சு மேல் ஏறி நின்ற காலம்...!

பள்ளிப்பருவத்தில் சில்லு, பளிங்கி, பம்பரம் விளையாடிய காலம்..!

“சாட் - பூட் – த்திரி” போட்டு ... ஐஸ் பாய்.. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலம்..!

பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு..!
ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..;

1960களில் குச்சி ஐஸ் அறிமுகம் .. சைக்கிள் ஹாண்டல் பாரில்... இரண்டு பெரிய பிளாஸ்க் கேண்கள் மாட்டி .. "ஐஸ் ப்ரூட் .. ஐஸ் ப்ரூட்" என்று தெருக்களில் கூவி விற்ற காலம் ..

ஐஸ் ப்ரூட் .. சேமியா ஐஸ் வாங்கி.. சொட்ட சொட்ட உறிஞ்சி சாப்பிட்டு.. யூனிபார்ம் சட்டைகளெல்லாம் சிவப்பு கலர் கறையாக மாறின காலம்..!

மரங்களில் ஏறி குரங்கு விளையாட்டு..!
பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம். ..!

டி.வி., செல்போன் இல்லாத காரணத்தால்.. கதை சொல்பவர்களுக்கு நல்ல மவுசு ... குறிப்பாக சினிமா கதை கேட்பதென்றால் ஆர்வமுடன் கேட்ட காலம்...!

"புல் புல் தாரா"வை நண்பரிடம் வாங்கி.. நம்பரை பார்த்து...கற்று .. சினிமா பாட்டு வாசித்த காலம் ...!

சைக்கிள் டியூப் ரப்பரில் உண்டிவில் செய்து சிட்டுக்குருவிகளை வேட்டையாடிய காலம்..!

சைக்கிளில் ஊர் சுற்றிய காலம் ...

சைக்கிள் கம்பெனியில் வாடகை சைக்கிளை எடுத்து ..
மாரியங்கோயிலுக்கு சென்று ... விளாரி செடி ...வாதா மடக்கி செடியில் கோத்த மாரியம்மன் கோவில் குச்சி முறுக்கு வாங்கி... சைக்கிள் ஹாண்ட் பாரில் கொடி போல் சொருகி
சாப்பிட்ட காலம் ....!

சைக்கிளில் டைனமோ லைட்.. எண்ணெய் லைட் பொருத்தி ஒட்டிய காலம்

சைக்கிள் ரிம்மில் குச்சியை வைத்து ரோட்டில் ஒட்டிய காலம்..!

குரங்கு பெடல் போட்டு .. சைக்கிள் ஓட்ட கற்ற காலம் ..!

சினிமா பைத்தியங்களாக .. ஒரு சினிமா விடாமல் .. நாலணா தரை டிக்கெட்டில் சினிமா பார்த்த காலம்..

படம் பார்த்த பிறகு அந்த பட பாட்டு புத்தகங்களை வாங்கி ... சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய காலம் ..!

ஒரு டூரிங் டாக்கீஸ் கூட விடாமல் .. மணலில் உட்கார்ந்து .. கருப்பு வெள்ளை ... MGR, சிவாஜி .. சினிமா படங்கள் பார்த்த காலம்..!

பெட்ரோமாக்ஸ் லைட்டு .. பாண்டு வாத்தியங்களுடன் ... சினிமா பிட் நோடீஸ் கொடுத்து .. அனைத்து வீதிகளையம் சுற்றி வந்த தள்ளு வண்டி தட்டி சினிமா விளம்பரங்கள் ..!
சுவரெல்லாம் .. .. "விரைவில் வருகிறது" ... "10-10-'63 முதல்" .. "10வது வாரம்" ... "கடைசி வாரம்" ... ஸ்லிப் ஒட்டிய ... வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள் நிறைந்திருந்த காலம்..!

பூரண மதுவிலக்கு.. குடிப்பழக்கம் என்னவென்று தெரியாத காலகட்டம்..
திருட்டுத்தனமாக சாராயம்காச்சி ... சைக்கிள் டியூபில் நிரப்பி .. இடுப்பில் சுற்றி .. வந்து விற்றதை கண்ட காலம்..!

கரி என்ஜின் பொருத்திய ரயில் வண்டியில் பயணம் செய்து தலைமுடியில் எல்லாம் கரித்தூள் ஆகிய காலம் ..!

சுவரெல்லாம் கரியில் எழுதிய விளம்பரங்கள் ... தாஜ் மஹால் பீடி .. 555 பீடி ..... 1431 பயோரியா பற்பொடி .. NVS .. TAS ரத்தினம் பட்டினம் பொடி ..
பெரியவர்கள்.. வாழை பட்டையில் லேபிள் ஒட்டி கட்டிய மூக்குப்பொடி பொட்டலம் வாங்கி ... உறிஞ்சி .. பொடி போட்ட காலம்..!

லாரி டயரில்.. தோல் வார் கோத்த செருப்பு வாங்கி ... எங்கு போனாலும் நடந்து சென்ற காலம் ..!

போன் அபூர்வமாக இருந்த காலம் .. PCO போன் கிடையாது...
பக்கத்து பணக்கார வீட்டு போனை நம்பி வாழ்ந்த காலம் ..

அவ்வீட்டின் பக்கத்து வீட்டுக்கோ எதிர் வீட்டுக்கோ போன் வந்தால்
...தெரு வாசலில் நின்று எதிர் வீட்டுக்கு கேட்கும்படி "உங்க வீட்டுக்கு போன் வந்திருக்கு ... சீக்கரம் வந்து பேசுங்க ... லைனில் இருக்கிறார்கள் ..' என்று கூப்பிட்ட காலம் ..!

மாட்டு வண்டி .. குதிரை வண்டியில் ... சவாரி செய்த காலம் ..

கார்கள் கிராமத்திற்கு சென்றால் “"பிளசர்” வந்திருக்கு" என்று ஆச்சிரியமாக பார்த்த காலம் ..!

சிறுவர்கள் மேல் வார் பொருந்திய அரை டவுசர் ..அரை டிராயர் ..போட்ட காலம் ..!

தினந்தோறும் .. மக்கள் கூடி .. ஆல் இந்தியா ரேடியோ .. ஆகாஷவாணி ஆறரை மணி நியூஸ் கேட்ட காலம்..

“நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்வதெல்லாம்
நிரந்தரமின்றி போக
மாற்றங்கள் மட்டுமே
நிரந்தரமாக்கிப் போகும்
காலத்தின் சுழற்சியால்..!
_*காலம்*_
_*மாறுவதற்கே காலம் .. !*

நாமும் இந்த காலத்தில் வாழ்ந்தோம் அனுபவித்தோம் என்று சொல்வதில் பெருமை கொள்வோம் இன்று நடப்பது கலியுகம் எல்லாவற்றிலும் புதுமை.

16 - 0

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 2 months ago

👉கல்லீரல் பற்றி ஓர் விழிப்புணர்வு பதிவு.
🥃மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும். அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்.

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது.

உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.

நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.

இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.

இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது. அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.

மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.

கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல். அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது.

அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். இத்தகைய கல்லீரலை காப்பாற்ற மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

மாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன எனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம். பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்.

அதிகம் பகிருங்கள். உணவே மருந்து பக்கத்தை லைக் செய்யுங்கள்.🙏

13 - 0

News 11 tamil_நியூஸ் 11 தமிழ்
Posted 3 months ago

உலக நாயகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

55 - 2